விளக்கம்பெற பிகேஆரை அழைத்தது ஆர்ஓஎஸ்

rosசங்கங்களின்  பதிவகம் (ஆர்ஓஎஸ்), சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  கட்சிநீக்கம்  செய்யப்பட்டது  பற்றி  விளக்கம்  கேட்க  பிகேஆரைக்  கூப்பிட்டிருப்பதாக  தெரிகிறது.

ஆர்ஓஎஸ்ஸிடமிருந்து  கடிதம் வந்திருப்பதை  பிகேஆர்  ஒழுங்கு  வாரியத்  தலைவர்  டான்  கீ  குவோங்  உறுதிப்படுத்தினார்.

ஆனால், அதில்  காலிட்  கட்சிநீக்கம்  செய்யப்பட்டது  பற்றிக்  குறிப்பிடப்படவில்லை  என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“ஒழுங்கு  வாரியமும்  கட்சித்  தலைமைத்துவமும் தவறாக  நடந்து  கொண்டிருப்பதாகக்  கூறப்படுவது  பற்றி  விளக்கம் பெறவே  ஆர்ஓஎஸ்  அழைத்துள்ளது”,  என்றாரவர்.

நாளைக்  காலை  10 ,மணிக்கு  ஆர்ஓஎஸ்  தலைமையகத்தில்  அச்சந்திப்பு  நடைபெறும்.