சுல்தான் முன்கூட்டியே நாடு திரும்புகிறார்

sultanசிலாங்கூர்  சுல்தான், புடாபெஸ்டிலிருந்து  திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே  நாடு  திரும்புவார்.

சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா  சனிக்கிழமை  திரும்பி  வருவார்  என  மாநில  அரசு  வட்டாரங்கள்  மலேசியாகினியிடம்  தெரிவித்தன.

இதற்குமுன்  அவர்  ஆகஸ்ட்  27-இல்  நாடு  திரும்புவார்  எனக்  கூறப்பட்டிருந்தது.

மாநிலத்தில்  நிலவும்  குழப்பத்தை  சுல்தான்  வந்துதான்  தீர்த்து  வைக்க  வேண்டும்.

சுல்தான், பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா வான்  இஸ்மாயில்  மந்திரி  புசார்  ஆவதை  ஏற்பாரா  அல்லது சட்டமன்றத்தைக்  கலைத்து  திடீர்  தேர்தலுக்கு  வழிகோலுவாரா  என்பதைப்  பொறுத்திருந்துதான்  பார்க்க  வேண்டும்.