நாய்கடி வாங்கி நடித்த சிபி

naigal-jakkirathaiநடிகர் சிபிராஜ், தயாரித்து, நடித்து வரும் படம் ”நாய்கள் ஜாக்கிரதை”. நாணயம் படத்தை இயக்கிய சவுந்தர்ராஜன் இயக்குகிறார். இந்தப் படம் ஒரு துப்பறியும் நாயை சுற்றி நடக்கிற கதை. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, மற்ற பணிகள் நடந்து வருகிறது.

இதுபற்றி சிபிராஜ் கூறியிருப்பதாவது: கடந்த 4 மாதங்களாக தொடர்ச்சியாக நடந்து வந்த படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. பெல்ஜியும் செப்போர்ட் என்ற நாயை தேடிக் கண்டுபிடித்து நடிக்க வைத்தோம்.

அதனை முறையாக பயிற்சி பெற்ற பயிற்சியாளர் மசூத் அகமத் என்பவர்தான் நடிக்க வைத்தார். சொன்னதை செய்யும் அருமையான நாய்தான் அது. ஆனால் சில நேரங்களில் கை கால்களை பதம் பார்த்து விடும்.

அதனுடன் நடிக்கும்போது 13 முறை கடிவாங்கி ஊசி போட்டிருக்கிறேன். ஆனாலும் பிரண்ட்லியான நாய். கடைசி நாள் படப்பிடிப்பில் அதனை பிரியவே மனம் இல்லை. என்றாலும் படத்தில் அதனை அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆறுதல் இருக்கிறது. இந்த மாத இறுதியில் ஆடியோவையும், அடுத்த மாதம் படத்தையும் வெளியிட இருக்கிறோம். தமிழ் சினிமாவில் இது முக்கியமான முயற்சியாக இருக்கும் என்கிறார் சிபிராஜ்.