துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டனர்

sorrowதேசிய  துக்க  தினமான  இன்று,  கோலாலும்பூரில் பல்லாயிரக்கணக்கான  மாநகர்  மக்கள்  சுல்தான்  அப்துல்  சமட்  கட்டிடத்துக்கு  முன்புறமுள்ள  டாட்டாரான்  மெர்டேகாவில்  ஒன்று  திரண்டு எம்எச்17  விபத்தில்  கொல்லப்பட்டவர்களுக்காக  நாடு  அனுசரிக்கும்  துக்கத்தைப்  பகிர்ந்து  கொண்டனர்.

காலை மணி  10.54-க்கு  நாட்டின்  மற்ற  பகுதிகளுடன்  சேர்ந்து  அவர்களும்  ஒரு  நிமிடம்  மவுன அஞ்சலி  செலுத்தினர்.

அவரவர்  சமய  முறைப்படி இறந்தவர்களுக்காக  பிரார்த்தனை  செய்து  கொண்டனர். பலர்  கண்ணீர்  வடித்ததையும்  காண  முடிந்தது.

அப்பகுதியில்  சென்று  கொண்டிருந்த  வாகனமோட்டிகளும்  தத்தம்  வாகனங்களை  நிறுத்தி   எம்எச் 17  விபத்தில் பலியானவர்களுக்கு  அஞ்சலி  செலுத்தினர்.

சுற்றுப்பயணிகளும்கூட  அஞ்சலி  செலுத்துவதைக் காண  முடிந்தது.