காலிட் பதவி விலகுகிறார்; திடீர் தேர்தல் இல்லை

 

khaஅப்துல்  காலிட்  இப்ராகிம்  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  விலக  சிலாங்கூர்  சுல்தான்  அனுமதித்தார்.

 

அதேவேளை, இன்னொருவர்  அப்பதவியை  ஏற்கும்வரை அதில்  தொடர்ந்து  இருக்குமாறும்  அவர்  கேட்டுக்கொண்டார்.

 

அதிகாரம்  சீராகக்  கைமாறுவதையே  சுல்தான்  விரும்புவதாக  தெரிகிறது. ஆனால், அவர்,  எம்பி  பதவிக்கு  இரண்டுக்கும்  மேற்பட்டவர்களைப்  பரிந்துரைக்குமாறு  பக்காத்தான்  ரக்யாட்  தலைவர்களைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பிகேஆரும்  டிஏபியும்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  பெயரை  மட்டுமே  பரிந்துரைத்துள்ளன.

முன்னதாக. இன்று  காலிட் சுல்தானைச்  சந்திக்கச்  சென்றபோது  அவர்  சட்டமன்றத்தைக்  கலைக்குமாறு  கேட்டுக்கொள்வார்  என்றும்  அதன் விளைவாக  திடீர்  தேர்தல்  வரப்போகிறது  என்றும்  பரவலாக  பேசப்பட்டது.