வெறித்தனமே நம் எதிர்காலம் ஆகிவிடக் கூடாது

kurupஅண்மைக்  காலமாக,  மலேசியாவில்  வெறித்தனம் தலையெடுத்து  வருவதாகக்  கூறும்  பிரதமர்துறை  அமைச்சர்  ஜோசப்  குருப், அதற்கு  இடமளிக்கக்  கூடாது  என வலியுறுத்தியுள்ளார்.

“நம்  ஊடகங்களில்  இன, சமய  வெறி  முக்கிய  இடம்பெற்று  வருவதைக் காண  வருத்தமாக  உள்ளது.  இந்நிலை வரவர  மோசமடைந்தும்  வருகிறது.

“இப்போதைய  நிலையே  நாட்டின்  எதிர்காலமாகி  விடக்கூடாது”, என  குருப்  ‘நல்லதாக ஏதாவது  சொல்லுங்கள்’ இயக்கத்தைத்  தொடக்கி   வைத்தபோது  கூறினார். சுதந்திர தினத்தையும்  மலேசிய  தினத்தையும் ஒட்டி இந்த இயக்கம்  தொடங்கப்பட்டுள்ளது.