காலிட்: எம்பி பதவிக்கு ஒரு பெயரை மட்டும் தாக்கல் செய்யும் பழக்கமெல்லாம் இல்லை

nameகடந்த  பொதுத் தேர்தலுக்குப்  பின்னர்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  தம்  பெயரை  மட்டுமே  பக்கத்தான்  ரக்யாட்  அரண்மனையிடம்  தாக்கல்  செய்ததாக பிகேஆரும்  டிஏபியும்  கூறிக்  கொண்டிருப்பதை  அப்துல்  காலிட்  இப்ராகிம்  மறுக்கிறார்.

எனவே, அதைக் காரணம்  காட்டி  இப்போதும்  ஒரே  ஒரு  பெயரை  மட்டுமே  தாக்கல்  செய்யப்போவதாக  அவ்விரு  கட்சிகளும் வாதிடுவது  பொருந்தாது  என்றாரவர்.

“பிகேஆரும்   பாஸும்  2008-இலும்  2013-இலும்  வெவ்வேறு பெயர்களைத்  தாக்கல்  செய்தன”, என்று காலிட்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

அப்போது  நியமனம்  செய்யப்பட்ட  மற்ற  வேட்பாளர்கள்  யார்  என்று  கேட்டதற்கு  அதை  வெளியிட  அவர்  மறுத்தார்.