அன்வார் ஒன்று சொல்கிறார்; காலிட் வேறொன்று சொல்கிறார்

one2008, 2013  பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர், சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  பக்கத்தான்  ரக்யாட்  அரண்மனையிடம்  ஒரு  பெயரைக்  கொடுத்ததா  அல்லது ஒன்றுக்கு  மேற்பட்ட  பெயர்களையா?

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்   ஒன்றுக்கு  மேற்பட்ட  பெயர்கள்  சமர்பிக்கப்பட்டதாகக்  கூறுகிறார். அன்வாரும்  பிகேஆர்  தலைவர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலும்  ஒருவரின்  பெயர்  மட்டுமே  கொடுக்கப்பட்டதாகச்  சொல்கிறார்கள்.

“பிகேஆரும்   பாஸும்  2008-இலும்  2013-இலும்  வெவ்வேறு பெயர்களைத்  தாக்கல்  செய்தன”, என்று காலிட் இன்று  பிற்பகல்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  தெரிவித்தார்.

அதை மறுத்த  அன்வார், பக்கத்தான் பங்காளிக் கட்சிகள் மூன்றும்   தனித்தனியே மூன்று  கடிதங்களை  அனுப்பியதாகக்  கூறினார்.  மூன்றிலும்  ஒரே  பெயர்தான்  இருந்தது- காலிட்டின் பெயர்.

“வேறு  யாருடைய  பெயரையும்  நாங்கள்  தாக்கல்  செய்யவில்லை”,  என  அன்வார்  கூறினார்.