செப்டெம்பர் 3 – எம்பி நியமனத்திற்கான கடைசி நாள்

 

Selangor sultanமந்திரி புசார் பதவிக்கான பக்கத்தான் ராக்யாட்டின் வேட்பாளர்களின் பெயரை அரண்மனையிடம் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் அடுத்த புதன்கிழமை என்று அரண்மனை நிர்ணயித்துள்ளது.

மலேசியாகினி பார்த்துள்ள இக்கடிதத்தில் செப்டெம்பர் 3 குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பாணி பக்கத்தான் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளார்.

இதனிடையே, கட்சிகள் இரண்டுக்கு மேற்பட்ட பெயர்களை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கை இவ்விவகாரத்தில் சுல்தான் ஒரு முடிவு எடுப்பதை எளிதாக்கும் என்று முகம்மட் முனிர் கூறினார்.

வான் அஸிசாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில் கட்சிகள் இரண்டுக்கு மேற்பட்ட பெயர்களை முன்வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் நகல்கள் பாஸ் தலைவர் ஹாடிக்கும் டிஎபி தலைமைச் செயலாளர் குவான் எங்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளன.