கீர் மருத்துவமனையில்: அவரது ஊழல் வழக்கு மூன்றாவது தடவையாக ஒத்திவைப்பு

khirஊழல்  குற்றத்துக்காக விதிக்கப்பட்ட  12-மாத  சிறைத்தண்டனையை  எதிர்த்து  முன்னாள்  மந்திரி  புசார்  டாக்டர்  முகம்மட் கீர்  தோயோ  செய்திருந்த  மேல்முறையீடு   மீதான விசாரணை, அவர்  மருத்துவமனையில்  இருப்பதால்  மூன்றாவது  முறையாக  ஒத்திவைக்கப்பட்டது.

கீர்  உடல்நலம்  குன்றியிருப்பதாக  அவரின்  வழக்குரைஞர் முகம்மட்  ஷாபி  அப்துல்லா  கூட்டரசு  நீதிமன்றத்தில்  தெரிவித்தார்.

அவருக்குக்  கடுமையான ஒற்றைத்  தலைவலி, அவரால்  நடக்கக்கூட  முடியவில்லை என  ஷாபி  கூறினார்.

கீரின் மேல்முறையீடு  மீதான  விசாரணைக்கு  நீதிமன்றம்  புதிய  தேதி  ஒன்றை  நிர்ணயம்  செய்தது. நவம்பர் 6-இல்  அது  விசாரிக்கப்படும்.