அம்னோ எம்பி: பக்கத்தான், சுய நலமிகளின் கூட்டணி

shamsulபக்கத்தான்  ரக்யாட்டில் தெளிவான  கொள்கை  இல்லாததும்  அதில்  உள்ள  கட்சிகள்  சுயநலத்துடன்  செயல்படுவதும்தான்  இன்றைய சிலாங்கூர்  அரசியல்  நெருக்கடிக்குக்  காரணம்  என  அம்னோ  எம்பி  ஷம்சுல்  அனுவார்  நசாரா  கூறினார்.

“சிலாங்கூர்  மந்திரி  புசார்  விவகாரத்தில்  ஒவ்வொரு  பக்கத்தான் கட்சியும் பொதுநல  நோக்கின்றி  சுயநலத்துடன்  செயல்படுவதுபோல்  தெரிகிறது. இதனால்தான் அவர்களால் அவ்விவகாரத்துக்கு ஒரு  தீர்வு  காண முடியவில்லை”, என  ஷம்சுல்  அம்னோ  வலைத்தளத்தில்  கூறினார்.

பிகேஆர்,  டிஏபி,  பாஸ்  ஆகியவை  பக்கத்தான்  நோக்கங்கள் வெற்றிபெற  பாடுபடவில்லை,  தன்னலத்துடன்தான்  செயல்படுகின்றன  என  லெங்கோங்  எம்பி-ஆன  ஷம்சுல்  குறிப்பிட்டார்.

இந்நெருக்கடி,  பக்கத்தானை  வழிநடத்துவதில்  அன்வார்  இப்ராகிம் தோற்றுப்போனார்  என்பதைக்  காண்பிப்பதாகவும்  அவர்  கூறினார்.