சுவா: அன்வார்தான் நடப்பில் எம்பி-ஆக இருப்பார்

chuaடாக்டர் வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  சிலாங்கூர் மந்திரி  புசாரானால் அன்வார் இப்ராகிம்தான்  மாநிலத்தை  நிர்வகிப்பர்  என முன்னாள்  மசீச  தலைவர்  டாக்டர்  சுவா  சொய்  லெக்  கூறியுள்ளார்.

அசிசாவின்  பின்னணியில்  இருந்துகொண்டு  அன்வார்தான்  ஆட்டுவிப்பார்  என்பதைச்  சொல்ல  ராக்கெட்  இயல்  படித்திருக்க  வேண்டியதில்லை  என்றாவர்.

அசிசாவுடன் தமக்குத்  தனிப்பட்ட  முறையில்  பகை  எதுவும்  கிடையாது  என்பதையும்  சுவா  வலியுறுத்தினார்.

“உண்மையில் அவரின்  பொறுமையையும்  அடக்கத்தையும் அன்வாருக்காக தம்மையே  அர்ப்பணித்துக் கொண்டிருப்பதையும்  கண்டு பிரமிக்கிறேன்”, என்று  அவர்  தம்  வலைப்பதிவில்  கூறினார்.