இரண்டு பெயர்களைத் தாக்கல் செய்யப்போவதாக பாஸ் பிடிவாதம்

mustafaமந்திரி  புசார்  பதவிக்கு  பக்கத்தான்  ரக்யாட்  கட்சிகள்  ஒரே  ஒரு  பெயரையே  அரண்மனையிடம்  தாக்கல்  செய்ய வேண்டும்  என்ற  அன்வார் இப்ராகிமின்  வேண்டுகோளை நிராகரித்த  பாஸ்,  இரண்டு  பேரைப்  பரிந்துரைக்கப்  போவதாகக்  கூறியுள்ளது.

சுல்தானின்  ஆணைப்படிதான்  பாஸ்  நடந்துகொள்ளும்  என  அதன்  தலைமைச்  செயலாளர்  முஸ்தபா  அலி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“(ஒரே  ஒரு பெயரைத்  தாக்கல்  செய்து) அரண்மனையைக்  கட்டாயப்படுத்துவதாக இருக்கக்  கூடாது”, என்றாரவர்.

மேலும், பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலின்  பெயரையும்  பாஸ் நியமனம்  செய்கிறது  என்பதிலிருந்து  அது   பக்கத்தான்  தோழமைக்  கட்சிகளின்  முடிவுக்கும் மதிப்பளிக்கிறது  என்பதைப்  புரிந்து  கொள்ளலாம்  என்றவர் சொன்னார்.