பகாங்கில் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் மெர்டேகா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளத் தடை

lee1பிகேஆர் செமம்பு  சட்டமன்ற  உறுப்பினர்  லீ  சியான்  சங், குவாந்தானில்  நடைபெறும்  மெர்டேகா  கொண்டாட்டங்களில்  கலந்துகொள்ளத்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்திலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்டிருப்பதால்  மெர்டேகா  கொண்டாட்டங்களில் தாம்  பங்கேற்பது  தடுக்கப்பட்டிருப்பதாக  லீ  இன்று  தெரிவித்தார்.

கடந்த  வாரம்   மாநிலச்  செயலகம் ஒரு  குறுஞ்செய்தி வாயிலாக  ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும் மெர்டேகா  கொண்டாட்டத்திலும்  அதற்கான  ஒத்திகையிலும் கலந்துகொள்ள வருமாறு  அழைத்திருந்தது  என  லீ கூறினார்.

“ஆனால் அதன் பின்னர்  மாநிலச்  சட்டமன்ற  செயலாளர்  தொலைபேசியில் கூப்பிட்டு  எனக்குக்  கொடுக்கப்பட்ட  அழைப்பு  இரத்துச்  செய்யப்பட்டிருப்பதாக  தெரிவித்தார்.

“சட்டமன்றம்  என்னை  இடைநீக்கம்  செய்திருப்பதால்  ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்  கொண்டாட்டங்களில்  கலந்துகொள்ள  எனக்குத்  தடை விதிக்கப்பட்டிருக்கிறதாம்”, என்றவர்  சொன்னார்.

கடந்த  ஆண்டு  இறுதியில்,  பகாங்கின் உபரி பட்ஜெட்டை “பொய்யானது”  என்று  கூறியதற்காக  லீ  இரண்டு  கூட்டத்தொடர்களில்  கலந்துகொள்ள தடை விதித்து பகாங்   சட்டமன்றம்  அவரை இடைநீக்கம்  செய்தது..