ஐஜிபி: பினாங்கு பிபிஎஸ் அதன் நோக்கத்தைவிட்டு விலகிச் செல்கிறது

ppsபினாங்கு  தொண்டர்  படையினர்(பிபிஎஸ்)  சட்டவிரோத  கும்பல்போல்  செயல்பட்டுக்  கொண்டிருந்தால்  போலீஸ்  அவர்களைக்  கைது  செய்யும்.

பிபிஎஸ் நான்காண்டுகளுக்கு  முன்பு  சமூகத்துக்குச்  செவை  செய்வதற்காக  அமைக்கப்பட்டது. ஆனால்,  அது  அந்த  நோக்கத்தைவிட்டு  விலகிச்  சென்று  விட்டதாக  தெரிகிறது  என  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

“பிபிஎஸ்  உறுப்பினர்  மக்களைத்  தாக்கியிருக்கிறார்கள், சில  செய்தியாளர்கள்  அடிக்கப்பட்டுள்ளனர், அவர்களுடன்  ஒத்துப்போகாதவர்களையும்  தாக்கி  இருக்கிறார்கள்….செய்தியாளர்களிடமிருந்தும்  பொதுமக்களிடமிருந்தும்  இரண்டு  புகார்களைப்  போலீஸ்  பெற்றுள்ளது”, என்றாரவர்.