அஸிசா: இனவாதத்திலிருந்து பெறும் விடுதலைதான் உண்மையான மெர்டேக்கா!

 

PKR- Aziza true freedomமெர்டேக்கா கொண்டாட்டம் நாம் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதை கொண்டாடுவது பற்றியதல்ல. இனவாதத்திலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவதான் உண்மையான சுதந்திரம் என்று மலேசியா மக்களுக்கு இன்று நினைவுறுத்தப்பட்டது.

“பிகேஆர் அனைத்து மலேசியர்களையும் சுதந்திரம் என்ற சொல்லின் உண்மையான மகிமையை உயர்வாகக் கருத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. அது காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுத்துக் கொண்டது மட்டுமல்ல.

“ஜலுர் கெமிலாங்கை பறக்க விடுவதன் வழி அதை கொண்டாடுவதற்காகவும் அல்ல”, என்று பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் கூறினார்.

மாறாக, உண்மையான மெர்டேக்கா உணர்வை பேணி வளர்க்க மலேசியர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், அதாவது “அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மை ஆட்சி” ஆகியவற்றிலிருந்து சுதந்திரம் அடைவதாகும்”, என்று அஸிசா கூறினார்.