மெர்டேகா அணிவகுப்புக்குப் பின்னர் 250 பிபிஎஸ் ஆள்கள் கைது

ppsஇன்று  காலை  எஸ்பிலேனட்  திடலில்  மெர்டேகா  அணிவகுப்புக்குப்  பின்னர்  அதில்  கலந்துகொண்ட  250  பினாங்கு   தன்னார்வ  காவல்  படையைச்  சேர்ந்த  250 பேரை  போலீஸ்  கைது  செய்தது.

“அவர்கள்  அனைவரும்  வாக்குமூலம் கொடுப்பதற்காக  போலீஸ்  நிலையம்  அழைத்துச்  செல்லப்பட்டனர்”, என  டிஏபி  ஆயர்  ஈத்தாம்  சட்டமன்ற  உறுப்பினரும்  பினாங்கு  முதலமைச்சரின்  அரசியல்  செயலாளருமான  வொங்  ஹொன்  வாய்.

அவர்களைச்  சுற்றிக்  கலகத்  தடுப்புப்  போலீசார்  காவலுக்கு  இருந்தனர்.

பக்கத்தான்  ரக்யாட்  சட்டமன்ற  உறுப்பினர்கள்  பலரும்  அவர்களுடன்  போலீஸ்  நிலையம்  சென்றுள்ளனர்.

அவர்கள்  சங்கச்  சட்டத்தை  மீறியதற்காகக்  கைது  செய்யப்பட்டிருப்பதாக  தெரிகிறது.