சட்டவிரோத குடியேறிகள் மீதான ஆர்சிஐ அறிக்கை என்னவாயிற்று?

edwinசாபா  டிஏபி,  சட்டவிரோத குடியேறிகள்  மீதான  அரச  விசாரணை  ஆணைய (ஆர்சிஐ) அறிக்கையை வெளியிட வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்துள்ளது.

சட்டவிரோத  குடியேறிகளுக்கு  வாக்குகளுக்காக  குடியுரிமைகள்  கொடுக்கப்பட்ட  கமுக்கமான  நடவடிக்கை  பற்றி  விசாரணை  நடத்திய  அந்த  ஆணையம்,  அதன்  அறிக்கையை  மே 12-இல்  பேரரசரிடம்  ஒப்படைத்தது. ஆனால், அது இன்னமும்  பொதுமக்கள் பார்வைக்கு  வராமல்  இரகசியமாக  வைக்கப்பட்டிருக்கிறது.

“அதை  வெளியிட   ஏன்  தயக்கம்? அரசாங்கம் எதையும் மூடிமறைக்கிறதா?”, என  டிஏபி சுதேசி மக்கள்  மன்றத்  தலைவர்  எட்வின்  போசி  வினவினார்.