எக்ஸ்கோவிடம் 4 மணிநேர விசாரணை; ‘குற்றவாளி’போல் நடத்தப்பட்டார்

pheeநேற்று  கைதான  பினாங்கு  தன்னார்வக்  காவல்  படைத்(பிபிஎஸ்)  தலைவர்  பீ போன்  பூ, போலீசார்  நான்கு மணி  நேரம்  தம்மிடம்  விசாரணை  நடத்தியதாகவும் ஒரு  குற்றவாளியைப் போல்  நடத்தினார்கள்  என்றும் கூறினார்.

“ஒரு  குற்றவாளியிடம்   நடந்துகோள்வதுபோல்  பல மாதிரி  கேள்விகளைக் கேட்டனர். படம்  பிடித்தனர். கைரேகையைப்  பதிவு  செய்தனர்”, என  பீ  நேற்றிரவு  தொலைபேசிவழி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

பிபிஎஸ்-ஸுக்குப்  பொறுப்பாகவுள்ள  ஆட்சிக்குழு உறுப்பினரான (எக்ஸ்கோ)  அவர்  நேற்று  மாலை  வாக்குமூலம்  அளிக்க  போலீஸ்  நிலயம்  சென்றபோது  கைது  செய்யப்பட்டார்.