கைரி: பிபிஎஸ் ஆபத்தானது, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது சரியே

khaiஅம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்,  பினாங்கு  தன்னார்வக்  காவல்  படைமீது  போலீசார்  நடவடிக்கை  எடுத்திருப்பது  சரியானதே  என்கிறார். அது  ஓர் “ஆபத்தான” கூட்டம்  என்றவர்  வருணித்தார்.

மாநிலப்  போலீசாரின்  பணிகளை அந்தத்  தன்னார்வப்  படையினர்  செய்யத்  தொடங்கி விட்டார்கள்  என  இளைஞர், விளையாட்டு  அமைச்சரான  கைரி  கூறினார்.

ஒரு  தன்னார்வப்  படை  பாதுகாப்புப்  பணிகளுக்கு உதவியாக  இருப்பதில்  பிரச்னை  இல்லை  ஆனால்,  அது  சங்கப்  பதிவகத்தில்  பதிவு  செய்யப்பட்ட  அமைப்பாக  இருப்பது  முக்கியம் என்றவர்  வலியுறுத்தினார்.