என்னை எப்போது கைது செய்யப்போகிறீர்கள்? ஐஜிபி-யைக் கேட்கிறார் குவான் எங்

guanபினாங்கு  தன்னார்வக்  காவல்  படையைச்(பிபிஎஸ்)  சேர்ந்த  156 பேரைக்  கைது  செய்த போலீசார்  அடுத்து  தம்மைக்  கைது  செய்யலாம்  என்று நினைக்கிறார்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்.

“இப்படிக்  கேட்கலாம்  என்று  நினைக்கிறேன். ‘என்னை எப்போது  கைது  செய்வீர்கள்?’ அவருக்காக (போலீஸ் படைத்  தலைவர் காலிட்  அபு  பக்கார்)க்  காத்திருக்கிறேன்”, எனச்  செய்தியாளர்களிடம்  லிம்  கூறினார்.

மாஜிஸ்ட்ரேட்  நீதிமன்றத்தில்  நிறுத்தப்படுவதற்காக  பிபிஎஸ்  படையினர்  தடுத்து  வைக்கப்பட்டுள்ள  வடகிழக்கு  மாவட்ட  போலீஸ் தலைமையகத்துக்கு  வெளியில் செய்தியாளர்களிடம்  பேசிய  லிம்   இவ்வாறு  கூறினார்.

ஐஜிபி-இன்  மிரட்டல்களுக்கு  மாநில  அரசு  பணியாது  என்றாரவர்.