ஜாஹிட்: பாஸ் யுனிட் அமாலுக்கும் இதே கதிதான்

unitபினாங்கு  தன்னார்வக்  காவல்  படை(பிபிஎஸ்)-க்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்பட்டதுபோல்  பாஸின்  தன்னார்வப்  படையான  யுனிட்  அமால்-மீதும்  போலீசார்  நடவடிக்கை  எடுப்பது “நிச்சயம்”  என்கிறார்  உள்துறை  அமைச்சர்.

“போலீஸ் இதேபோன்ற  நடவடிக்கையை  எடுக்கும். அது  உறுதி”, என  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  இன்று  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

பிபிஎஸ்-சுக்கும்  யுனிட் அமாலுக்குமிடையிலான  வேறுபாடு  பற்றி  வினவியதற்கு  அமைச்சர்  இவ்வாறு  கூறினார்.

நேற்று  பிபிஎஸ்  படையினர்  கைது  செய்யப்பட்டதற்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்-தான்  காரணம்  என்றாரவர்.

“நடவடிக்கை  எடுக்க  முடியுமா  என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப்  போலீஸுக்குச்  சவால்  விட்டார். ஐஜிபி  நடவடிக்கை  எடுத்துள்ளார்”, என்று  அஹ்மட்  ஜாஹிட்  கூறினார்.