ராயர் கைது செய்யப்பட்டார்

 

rayerபினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் இன்று (செப்டெம்பர்1) சங்கங்கள் சட்டத்தின் கீழ் ஜாலான் பட்டானியிலுள்ள மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பிற்பகல் மணி 3.00 அளவில் போலீசார் அவரை வாக்குமூலம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர் என்று கூறிய ராயர், அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்ததாக மேலும் கூறினார்.