‘தயிப் மஹ்முட் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் அல்லர்’

bekirசரவாக்கின்  முன்னாள்  முதலமைச்சர் மஹ்முட்  அபு  பெக்கிர்  தயிப்,  தம்  தந்தை  அப்துல்  தயிப்  மஹ்முட்  மலேசியாவின்  மிகப்  பெரிய  பணக்காரர்  என்பதை  மறுத்தார்.

கோலாலும்பூர்  ஷியாரியா  நிதிமன்றத்தில்,  தம்  முன்னாள்  மனைவி  ஷானாஸ் அப்துல்  மஜிட்  தொடுத்துள்ள வழக்கில்   சாட்சியமளித்த  அபு  பெக்கிர்  அவ்வாறு  கூறினார். மனைவியிடம்  முரட்டுத்தனமாக  நடந்து கொண்டதாகக்  கூறப்பட்டதையும்   மறுத்தார்.

“ஆத்திரத்தில் அப்படிக்  கூறியுள்ளார். அதற்கு  ஆதாரமில்லை,  அது  உண்மையும்  அன்று.. என்  தந்தைதான் மலேசியாவின்  மிகப் பெரிய  பணக்காரர்  என்றதும்  அதே  போன்றதுதான். நம்ப முடியாதது”, என்றாரவர்.