ஹுசாம்: அம்னோ, சிலாங்கூரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாஸ் விவகாரத்தில் தலையிடுகிறது

husamதுணைப் பிரதமர்  முகைதின்  யாசினுடன்  தொடர்புள்ள  அம்னோ  தரப்பு  ஒன்று  சிலாங்கூரைக்  கைப்பற்றும்  நோக்கில்  பாஸ்  விவகாரங்களில்  தலையிட்டு  வருவதாகக்  கூறுகிறார்  பாஸ்  உதவித்  தலைவர்  ஹுசாம்  மூசா.

பாஸை  பக்கத்தானை  ரக்யாட்டிலிருந்து  பிரித்து  விட்டால்  அதன்பின்னர்  அம்னோ  பாஸை  நெருங்குவதும்  அதனுடன்  ஒத்துழைப்பதும்  எளிதாகும்  என்று  அத்தரப்பு  நினைக்கிறது.

“பாஸில்  உள்ள  சிலரை  வசப்படுத்திக்  கொண்டால்  பாஸை விருப்பம்போல  ஆட்டி வைக்கலாம் என்று  அது  நம்புகிறது”, என்றவர்  கூறினார்.

ஆனால், அத்திட்டம்  பலிக்காது. பாஸ்  அம்னோவைப்போல்  செயல்படுவதில்லை. அதன்  செயல்பாடு  வேறு  மாதிரியானது  என்று  ஹுசாம்  கூறினார்.