கெராக்கான்: ஜாஹிட்மீதும் தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட வேண்டும்

sunமலாய்க்காரர்- அல்லாதாரைத்  திமிர் பிடித்தவர்கள்  என்று  குறிப்பிட்ட  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடிமீதும்  தேச நிந்தனைச்  சட்டத்தின்கீழ்க்  குற்றம் சாட்ட  வேண்டும்  என  கெராக்கான்  இன்று  கூறியது.

“குறிப்பிட்ட  ஒரு   தரப்பினரைப்  பார்த்து  சொன்னாரா,  மலாய்க்காரர்- அல்லாத  அத்தனை  பேரையும்  நினைத்துச்  சொன்னாரா  என்று  தெரியவில்லை  ஆனால்,  ஜாஹிட்  அப்படிச் சொல்லியிருக்க  வேண்டிய  அவசியமே  இல்லை”, என  கெராக்கான்  இளைஞர் துணைத்  தலைவர்  எண்டி  யோங்  கூறினார்.

“அப்படிச்  சொன்னது  இன வெறுப்பைத்  தூண்டுவதற்கு ஒப்பாகும். அது  நல்லதல்ல”, என  யோங்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

மலாய்க்காரர்கள்- அல்லாதாரிடையே திமிர்தனம் கூடி வருகிறது. அவர்கள்  பூமிபுத்ராக்களையும்  ஆட்சியாளர்களையும்  இஸ்லாத்தையும்  இழிவுபடுத்துகிறார்கள்  என ஜாஹிட்  கூறியதாக த  சன்  செய்தி  வெளியிட்டிருக்கிறது.