பாஸ் முக்தாமார் புதிய இடத்தில் நடைபெறும்

mukthaஇரண்டு  வாரங்களில்  நடைபெறவுள்ள  பாஸ்  பேராளர்  மாநாடு  ஜோகூர்  பாருவில்  ஏற்கனவே  திட்டமிடப்பட்ட  இடத்தில்  நடக்காது.

சூத்ரா  மாலுக்கு  அருகில்  உள்ள  திறந்த  வெளியில்  அது  நடப்பதாக  இருந்தது. ஆனால்,  அதன்  உரிமையாளர் “சில  தரப்புகளின்  நெருக்குதலுக்கு ஆளானதால்” கட்சி  கொடுத்திருந்த  ரிம75,000 முன்பணத்தைத்  திருப்பிக்  கொடுத்து  விட்டார்  என  பாஸ்  உதவி  தலைமைச்  செயலாளர்  கைருல்  பய்ஸி  அஹ்மட்  கமில்  கூறினார்.

எனவே,  மாநாடு இப்போது பத்து  பஹாட்டில், ஸ்ரீகாடிங்  மாவட்டத்தில் நடைபெறும். மாநாட்டுக்காக  அங்குள்ள  ஒரு  நிலப்பகுதி  திருத்தி  அமைக்கப்படும்.