சுப்பிரமணிய சுவாமியை கைது செய்ய வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை – சுவாமிக்கு “இசட்” ரக பாதுகாப்பு!– மத்திய அரசு

suppiramaiyan_suvaamiமீனவர்கள் தொடர்பில் இலங்கைக்கு ஆலோசனை வழங்கியதாக ஒப்புக்கொண்ட சுப்பிரமணிய சுவாமியைக் கைது செய்யுமாறு மீனவர்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கை சென்றிருந்த போது தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தான் பேசியதாகவும், அப்போது, எல்லை தாண்டிய காரணத்திற்காக கைது செய்யும் மீனவர்களை விடுவித்து  விடுமாறும், விசைப்படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்று கூறி படகுகளை சிறைப்பிடித்து வைத்துக் கொள்ளுமாறும் இலங்கைக்கு ஆலோசனை கூறியதாகக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்தால் கொதித்தெழுந்துள்ள மீனவப் பிரதிநிதிகள் சுப்பிரமணிய சுவாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது குறித்து மீனவ நேசக்கரங்களின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கருத்து தெரிவித்த போது,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த மூன்றரை மாதங்களில் மட்டும் 350-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது 63 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கைது நடவடிக்கை, விசைப் படகுகள் பறிமுதல் ஆகியவற்றைக் கண்டித்து தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பிரச்சினை எழும்போதெல்லாம் தமிழக முதல்வரும் கடிதங்கள் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.  கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில், விசைப்படகுகள் விடுவிக்கப்படாததன் பின்னணியில், தான் உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி ஒப்புக் கொண்டுள்ளார்.  இதுதான் தங்களது நிலைப்பாடா என்பதை பாஜக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.

மேலும், தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிய குற்றத்துக்காகவும் சுப்பிரமணியன் சுவாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.

இதே கோரிக்கையை பல்வேறு மீனவப் பிரதிநிதிகளும் வலியுறுத்தி வருவதால் பிரச்சினை தீவிரமடைந்து வருவதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமிக்கு “இசட்” ரக பாதுகாப்பு!– மத்திய அரசு

இலங்கை ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும், ஜனதா தள் கட்சியை கலைத்து ப.ஜ. கா வில் இணைத்துக் கொண்ட சுப்பிரமணிய சுவாமிக்கு மத்திய அரசு அதிஉயர் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இந்த “இசட்” ரக பாதுகாப்பு  சோனியா காந்தி, ராகுல் காந்தி, போன்றவர்களுக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்பாகும், ஆகையால் இவர் தமிழ் நாட்டுக்கோ அல்லது இந்தியாவின் எப்பகுதிக்கு சென்றாலும் இவரை அம் மாநில அரசின் சட்ட திட்டங்கள் மூலம் எதுவித நடவடிக்கைகளும் எடுக்க முடியாது.

இலங்கை அரசுக்கு தமிழக மீனவர்களின் படகுகளை பறிக்க ஆலோசனை வழங்கியதை ஒத்துக்கொண்ட இக் கோமாளிக்கு இந்தியா மத்திய அரசு கொடுத்திருக்கும் இந்த பாதுகாப்பு தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிப்பு

தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க இலங்கை அரசுக்கு தானே ஆலோசனை கூறினேன் என்று பேட்டி கொடுத்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து தமிழகத்தில் 2வது நாளாக இன்றும் கொடும்பாவி எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு எதிராக தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

அதில் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் உளுந்துர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

TAGS: