நாம்…..(ஆதிநேசன்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

kavithai_09-09-2013picநாம் நடக்கும் பாதை….

நாமறிவோமா..?

நாள் கடந்த போதே…

நாமுணர்வோமா…?

நேர் வழிகள் மாறி..

நீதி கொன்றோமே..?

ஊர் பழிகள் கூறி..

உண்மை மறைத்தோமே…?

பேர் எடுக்க இங்கு….

பிரிவினை கொண்டோமே..?

நார் போலே இங்கு..

நம்மினம் பிரிந்தோமே…?

சீர்ப்படுத்தும் பணியில்..

சிதைவுகள் செய்தோமே..?

யார் பொறுப்பு என்று..

யோசனை செய்வோமே…!!!!

நாம் நடக்கும் பாதையை …

நாமாய் நடப்போமே…..!!!!!

 

ganesanA-ஆதிநேசன்,

கெமிஞ்செ,நெ.செம்பிலான்.

TAGS: