மன்னிப்பு, சுல்தான் இன்னும் முடிவெடுக்கவில்லை

 

candசிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு ஒவ்வொரு கட்சியும் இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் விடுத்திருந்த உத்தரவுக்கு மாறாக பிகேஆரும் டிஎபியும் தலா ஒரு பெயரை மட்டுமே அரண்மனைக்கு அனுப்பி இருந்தன.

சிலாங்கூர் சுல்தான் இக்கட்சிகளின் செயலை ஆணவமானது மற்றும் துரோகமானது என்று வர்ணித்திருந்ததைத் தொடர்ந்து பிகேஆரும் டிஎபியும் சுல்தானிடம் மன்னிப்பு கோரின.

அக்கட்சிகள் கோரியிருந்த மன்னிப்பு குறித்து சுல்தான் இன்னும் எந்த கட்டளையும் பிறப்பிக்கவில்லை என்று சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகமட் முனிர் பாணி பெரித்தா ஹறியானிடம் கூறியுள்ளார்.