இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த மாஸ் விமானம் திரும்பியது

 

masநேற்றிரவு இந்தியா, ஹைதராபாத்துக்கு இங்கிருந்து கிளம்பிய மாஸ் பயணம் எம்எச்198 ஏதோ கோளாறு காரணமாக திரும்பி வந்து விட்டது. அந்த விமானத்தில் தீ பற்றியதால்தான் விமானம் திரும்பி வர நேரிட்டது என்ற வதந்தியை மலேசியன் ஏர்லைன்ஸ் (மாஸ்) நிராகரித்துள்ளது.

இன்று காலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் விமானம் திரும்பியதற்கு “தானியங்கி-பைலெட்டில் ஏற்பட்ட ஒரு கோளாறுதான் காரணம்” என்று மாஸ் கூறுகிறது.

“விமானத்தில் நெருப்பு பற்றிக் கொண்டது என்று சோசியல் மீடியாவில் வலம் வரும் கூற்றுகள் உண்மையல்ல”, என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

அக்குறைபாடு விமானம் அல்லது பயணிகளின் பாதுகாப்பிற்கு எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப் பயணத்திற்கு பொறுப்பான கேப்டன் திரும்பிவிட முடிவெடுத்தார்”, என்று அந்த அறிக்கை கூறுகிறது.