இலங்கையின் இன மதப்பிரிவினரை பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக வாடகைக்கு அமர்த்துகிறது!

india-pakistan-flag_0இலங்கையில் உள்ள பிரச்சினைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவுக்கு சதி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டைம்ஸ் ஒப் இந்தியா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது

பாகிஸ்தான் குறிப்பாக இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்களை பயன்படுத்தி இந்தியா தொடர்பான உளவு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இதன் அடிப்படையிலேயே கடந்த 10 மாதங்களுக்குள் இரண்டு இலங்கை முஸ்லிம்கள் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிககரத்தின் வழிகாட்டலில் இந்தியாவுக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் தற்போது இந்துவான அருண் செல்வாராஜாவை பயன்படுத்தி உளவு நடவடிக்கையை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பாகிஸ்தானின் செயல் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பாகிஸ்தானின் இந்த செயல்ää இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இன்னும் பிரச்சினையை கொண்டு வரவில்லை.

எனினும் பாகிஸ்தான், மத மற்றும் இனங்களை பயன்படுத்தி தமது பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுப்பது அதன் ஒரு ஆயுதமாகவே கருதப்படுகிறது.

இது வரையறுக்கப்பட்ட பெறுமதியை மாத்திரமே கொண்டிருக்கும் என்றும், டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு கருத்துரைத்துள்ள முரண்பாடுகள் தொடர்பான புதுடில்லி நிபுணர் சஹானி என்பவர் தெரிவித்துள்ளார்.

TAGS: