சுல்தானை சந்திக்க பிகேஆர் ஆர்வம்

 

Palace wants 2 namesஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மாநில புதிய மந்திரி புசார் நியமனத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், பிகேஆர் சுல்தானை சந்திக்க விரும்புகிறது.

கட்சியின் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் தேர்வு செய்யப்படுவார் என்று இன்னும் நம்பிக்கையில் இருக்கும் பிகேஆர், அவருக்கு சிலாங்கூர் சட்டமன்றத்தில் இன்னும் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் சுல்தானுடனான சந்திப்பை விரும்புகிறது என்று கட்சியின் தலைமச் செயலாளர் சைபுடின் நசுதியான் கூறினார்.

“(வான் அஸிசாவுக்கான) ஆதரவு தெளிவாகவும் மாற்றம் ஏதுமில்லாமலும் இருக்கிறது என்பதால், பிகேஆர் சுல்தானின் ஆலோசனையைப் பெறுவதற்காக அவரை சந்திக்க விரும்புகிறது”, என்றாரவர்.

சந்திப்பதற்கான பிகேஆரின் கடைசி நிமிட கோரிக்கை வான் அஸிசாவுக்கு 56 இல் 30 சட்டமன்ற ஆதரவு இருந்த போதிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

எம்பி விவகாரத்தில் சுல்தானுடனான சந்திப்புக்கு பிகேஆர் விடும் மூன்றாவது கோரிக்கை இதுவாகும்.