நான் தமிழின துரோகி அல்ல! – விஜய் உருக்கம்

vijay_jillaஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் பல மாதங்களாக எதிர்ப்புகள் எழுந்து கொண்டு வந்தது. அதோடு, தமிழ் உணர்வு கொண்டவர்கள் தமிழின துரோகியான ராஜபக்சேவின் நட்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க மாட்டார்கள் என்று விஜய்க்கு எதிராகவும் போர்க்கொடி பிடித்தனர்.

இந்த நிலையில், பல மாதங்களாக நடந்து வரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சமீபத்தில் லைகா நிறுவனத்தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா பத்திரிகையாளர்களை சந்தித்து. எனக்கும், ராஜபக்சேவுக்குமிடையே எந்த தொடர்பும் இல்லை. எனக்கு எதிராக வேண்டுமென்றே வதந்தி பரப்பி விட்டு வருகிறார்கள் என்று விளக்கமளித்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த கத்தி ஆடியோ விழாவில் இதுபற்றி விஜய் பேசுகையில், நாங்க படம் எடுக்கிறது சண்டை போடுவதற்காக அல்ல. தியேட்டருக்கு வரும் அனைவரும் சந்தோசமா படம் பார்த்து ரசிக்கிறதுக்காகத் தான். யாருக்கும் எதிராகவோ, ஆதரவாகவோ இந்த படத்தை எடுக்கல.

மேலும், நான் தியாகின்னு சொல்ல வரல, ஆனா தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் நான் துரோகி இல்ல. கொஞ்ச நாளாவே கண்டபடி வதந்தி பரப்பி விடுறாங்க. உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனா இந்த மாதிரி வதந்திக்கெல்லாம் எப்படி விளக்கம் கொடுக்க முடியும் என்றார்.