ஆட்சியாளரின் தேர்வு மீது கேள்வி எழுப்பினால் பிஎன் போராட்டத்தில் இறங்கும்

Bn-mb's choiceசிலாங்கூர் பிஎன் தொடர்புக்குழு தலைவர் நோ ஒமார் இன்று ஷா அலாம் செக்சன் 18 இல் மந்திரி புசார் தேவு சம்பந்தமான நெருக்கடியில் சுல்தானுக்கு ஆதரவு தெரிவிக்க குழுமிய கூட்டத்தினருடன் கலந்து கொண்டு பேசிய போது சுல்தானின் முடிவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், சுல்தானின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் கூர்ந்து ஆராயும் போது பிஎன் மௌனமாக இருக்க முடியாது என்றார்.

“முடியாட்சிக்கு சவால் விடப்படும் போதும் மரியாதை காட்டப்படாத போதும் பிஎன் பொங்கி எழும். பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட பின்னரும் சுல்தானின் தேர்வை எதிர்க்கும் கட்சிகள் இருந்தால் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்”, என்று நோ கூறினார்.

கெராக் டாவ்லாட் என்ற அரசு சார்பற்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் 18 அரசு சார்பற்ற அமைப்புகளைப் பிரதிநிதித்து மஞ்சல் சட்டை அணிந்திருந்த சுமார் 500 பேர் பங்கேற்றனர்.