காலிட் மிகச் சிறந்த எம்பிகளில் ஒருவர், இஸ்கந்தர் கூறுகிரார்

 

PAS - Khalid one of the bestசிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவின் பாஸ் உறுப்பினர் இஸ்கந்தர் அப்துல் சாமாட் மாநிலத்தின் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகப் போகும் காலிட் இப்ராகிம் இம்மாநிலத்தின் மிகச் சிறந்த மந்திரி புசார்களில் ஒருவர் என்று இன்று பாராட்டினார்.

இன்று சிலாங்கூர் மாநில அரசாங்க நிருவாக கட்டடத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்கந்தர் தாம் அவரை பாராட்ட விரும்புவதகாவும், அவர் மாநிலத்திற்கு 2008 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த சேவையாற்றியுள்ளார் என்றும் கூறினார்.

இன்றுடன் காலிட் இப்ராகிமின் மந்திரி புசார் பதவி முடிவிற்கு வருகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலிட்டின் இடத்தை நிரப்பவிருப்பவரின் பெயரை சிலாங்கூர் அரண்மனை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மந்திரி புசாரின் பதவிப் பிரமாணம் நாளை காலை மணி 10.00 அளவில் கிள்ளான், இஸ்தானா அலாம் ஷாவில் நடைபெறும்.

அப்பதவிக்கு அரண்மனையால் பேட்டி காணப்பட்ட மூவரில் இஸ்கந்தரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.