கத்தி -ஆதிநேசன்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

shoutகத்தி……….

எதிரியின்

ஆயுதமென்று

கத்தி பேசினார்கள்…!

காதில்

விழவில்லை…..

கத்தியின்

கதாநாயகனுக்கு….!

கண்ணுக்கு தெரிந்தது

கள்ள நோட்டுகளும்

காலத்தால் அழியும்

கேவலப்புகழாசையும் …!

முறுக்கு விற்பனையானது

முருகதாசின் தமிழ்ப்பற்று…!

ஏழாம் அறிவில்

எங்களை விழிக்கச் செய்தது

எல்லாம் வியாபாரம் தானோ..? 

வேசங்கள் வெளுக்கின்றன…!

வெள்ளிதிரைக்காக  விபச்சாரமானது

வெற்றுரை வசனங்கள்…!

இராஜ பக்சேவின்

இரண வேட்டைக்கு…

இதோவிங்கே பண வேட்டை…!

தமிழனாய்

தவிர்ப்போம் நாம்…..

திரையீட்டை…!!!!

 

ganesanA-ஆதிநேசன் ,

கிமிஞ்செ, நெ.செம்பிலான்.

TAGS: