மீனவர் பிரச்சனை: பன்னீரும் கடிதம்

pannirc_ selvamஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 20 பேரையும், 75 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

கடந்த செப்ரெம்பர் 27ஆம் திகதி பிடிக்கப்பட்ட 4 மீனவர்கள் மற்றும் நேற்று அதிகாலை 4 படகுகளுடன் பிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் என 20 பேர் இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

6 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அவர்களில் 72 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

ஆனால் அவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை. தங்களது சீரிய தலைமையின் கீழ் இயங்கும் மத்திய அரசின் உதவியால் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 71 மீன்பிடி படகுகளை இலங்கை அரசு இன்னும் விடுவிக்கவில்லை. அவை மழையின் காரணமாக உபயோகமற்றதாகி விடும். எனவே மேலும் சேதமடைந்து பழுதடைவதை தடுக்க விரைவில் தொடங்க இருக்கும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பே அவற்றை விடுவிக்க வேண்டும்.

கடந்த மாதம் 27ம் திகதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் பயணம் செய்த படகு தொழில் நுட்ப கோளாறு காரணமாக காற்று மற்றும் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டனர். 28ம் திகதி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படை காங்கேசன் துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 29ம் திகதி கய்ட்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை வருகிற 10ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர் என்ற மற்றொரு தகவலையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கடந்த 29ம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தில் இருந்து 4 படகுகளில் 16 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

கடந்த 30ம் திகதி அதிகாலையில் இவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றது.

தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்க பாரம்பரிய உரிமைகள் இருந்தும் இலங்கை கடற்படையினரால் அவர்களுக்கு தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது என அக் கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: