காலிட் கொண்டுவந்த சம்பள உயர்வை அஸ்மின் குறைப்பார்

allowசிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி,  மாநிலத்தின்  நான்கு வகை உயர்  அரசு  ஊழியர்களின்  அலவன்ஸ்  உயர்வை  மறு ஆய்வு  செய்ய  மாநில  சட்டமன்றத்திடம்  பரிந்துரைப்பார்.

அவரின்  அலவன்ஸ்  உள்பட,  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்கள்,  சட்டமன்றத்  தலைவர், துணைத்  தலைவர்  ஆகியோரின்  அலவன்சுகளை  மறு ஆய்வு  செய்வது  இப்பரிந்துரையில்  அடங்கும்.

2013-இல்  அப்போதைய  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிம்  இந்த  அலவன்ஸ்  உயர்வை  அறிமுகப்படுத்தியபோது  அதைக்  கடுமையாகக்  குறைகூறியவர்களில் அஸ்மினும்  ஒருவராவார்.

“கடந்த  ஆண்டில்  உயர்த்தப்பட்ட  அலவன்சுகளை  மறு ஆய்வு  செய்வதென  முடிவு  செய்துள்ளோம்.

“இதற்கான  தீர்மானம்  நவம்பர்  மாத  சட்டமன்றக்  கூட்டத்தில் கொண்டுவரப்படும்”. இன்று  தமது  முதலாவது   ஆட்சிக்குழுக்  கூட்டத்துக்குத்  தலைமையேற்ற  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  அஸ்மின்  இவ்வாறு  கூறினார்.