அரசாங்கத்தின் ‘ஹரி ராயா பரிசு’:ரோன்95 விலையேற்றம்

jofriஹஜ்ஜுப் பெருநாள்  கொண்டாடப்படவுள்ள  வேளையில்  திடீரென  எண்ணெய் விலையை  உயர்த்திய  அரசாங்கத்தை பாஸ்  தலைவர்கள்  சாடியுள்ளனர்.

பிஎன்   13வது  பொதுத்  தேர்தலில்  வென்ற  பின்னர்  ஏற்பட்டுள்ள  இரண்டாவது  விலையேற்றம்  இதுவென  சரவாக்  பாஸ்  துணை  ஆணையர்  ஜொப்ரி  ஜராயீ  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“முஸ்லிம்கள்  தியாகத்  திருநாளைக்  கொண்டாடும்  வேளையில் ரோன்95  மற்றும்  டீசல் திடீரென்று  லிட்டருக்கு  20 சென் விலை  உயர்த்தப்பட்டிருப்பது  அதிர்ச்சி  அளிக்கிறது”, என்றாரவர்.

எரிபொருள்  விலை  உயர்வால்  மற்ற  பொருள்கள்,  சேவைகளின்  விலையும் உயரப்  போகிறது  என  வேதனையுடன்  குறிப்பிட்டார் ஜொப்ரி.