முரண் – அ.ஈழம் சேகுவேரா

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

Tamil school - finance5பள்ளிச்சீருடையில் 

எனது மடியிருத்தி

இரட்டைப்பின்னலிட்டு

இடுப்புப்பட்டியிருக்கி

கழுத்துப்பட்டி முடிந்து

புத்தகப்பை தோளில் மாட்டி

உனை முன்னே போகவிட்டு

பின்னே இருந்து 

அழகு பார்க்கும்

children_cardsதந்தை மனசு எனக்கு

அப்போதும் இப்போதும்.

 

தலைவாரிப்பொட்டிட்டு

பிஞ்சுப்பாதங்களுக்கு 

கொலுசிட்டு 

புத்தாடை உடுத்தி

பொம்மைகள் செய்யும் 

உந்தன் 

குழந்தைத்தனத்தையே

Children_Enjoying_Holidays_2நான் அதிகம் 

நேசித்திருக்கிறேன்.

இன்னமும்

விரும்புகின்றேன்.

 

இருந்தும் நீ

பூப்பெய்து விட்டாய்

உந்தன் சிறுபராயம் 

தொலைந்து 

சமூகக்கட்டுக்குள் போனதை

people_tamilnadu57_jpgஎன்னால் இன்னமும்

ஜீரணிக்க முடியவில்லை.

மொத்தத்தில் 

இதுவொரு முரண்பாடான 

உலகம் தான்.

மூடத்தை சமூக ஒழுக்கம் 

என்கிறது.

 

அன்று போல

இன்றும் ஆன உன் 

அதே அச்சொட்டுச்சிரிப்பை

KELUM_LK_CHILD“இழிப்பு” என்கிறது.

கனிந்த பேச்சை

“சத்தம்” என்கிறது.

வளைவு, நெளிவு, சுழிவு,

ஆகமொத்தத்தில்

உந்தன் நளினத்தை

“ஆட்டம்” என்கிறது. 

 

அன்று நீ 

பொம்மை செய்ததும்

eelam childsஇன்று நீ 

பொம்மை ஆனதும் 

உண்மையே.

வெறும் பதின்ம வயது

எந்தன் செல்லமே!

 

இலங்கை முல்லைத்தீவிலிருந்து…

தாயக கவிஞர்

அ.ஈழம் சேகுவேரா

கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு:

TAGS: