பாஸ்: சிலாங்கூரை பிகேஆரும் டிஏபி-யும் மட்டும் ஆளவில்லை

mafodzபாஸ்  தன்  எதிர்ப்பையும்  மீறி  சிலாங்கூரில்  அக்டோபர்பெஸ்ட்  விழா  நடத்தப்பட்டதைக்  கண்டு  ஏமாற்றமடைந்துள்ளது.

சிலாங்கூர்  பக்கத்தான்  மாநிலம்  என்றும், “டிஏபியும்  பிகேஆரும்  மட்டும்  அதை ஆளவில்லை”  என்றும்  கூறிய  பாஸ்  உலாமா  மன்ற உதவித்  தலைவர்  மாபோட்ஸ்  முகம்மட்,  தாங்கள்  எதிர்ப்புத்  தெரிவித்ததை  மற்ற  இரண்டு  கட்சிகளும்  கருத்தில்  கொண்டிருந்திருக்க  வேண்டும்  என்றார்.

“அவை கிழக்கத்திய  மற்றும்  இஸ்லாமிய  கலாச்சாரத்தைப்  பின்பற்றி  மது  அருந்தும்  நிகழ்வுக்கு  ஊக்கம்  அளித்திருக்கக்  கூடாது.  அதற்கு  நாங்கள்  எதிர்ப்புத்  தெரிவித்திருந்தோம்”, என்றவர்  உத்துசான்  மலேசியாவிடம் கூறினார்.

இவ்விவகாரத்தில்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  மவுனமாக  இருப்பதையும்  அவர்  சாடினார்.