கடல்கரையில் மேல்சட்டையின்றிக் காணப்பட்ட பெண்களை போலீஸ் தேடுகிறது

pdபோர்ட்  டிக்சன்  கடல்கரையில்  மேல்சட்டையின்றி  சூரிய  குளியல்  போட்ட  நான்கு  பெண்களை  நெகிரி  செம்பிலான் போலீசார்  தேடுகின்றனர்.

அது  பற்றி போர்ட் டிக்சன்  முனிசிபல்  மன்றம்  புகார்  செய்திருப்பதை  போலீஸ்  உறுதிப்படுத்தியதாக சின்சியு  டெய்லி கூறியது.

த ஸ்டாரும்  அச்செய்தியை அறிவித்திருந்தது.  20-வயதுடைய  பெண்கள் மூவரும்  40-வயது  பெண்  ஒருவரும்  பிகினி  மட்டும்  அணிந்திருந்ததைக் கண்டதாக பலர்  அதனிடம் தெரிவித்துள்ளனர்..

போர்ட்  டிக்சன்,  பந்தாய்  சவுஜானாவில்  பிற்பகல் 3 மணி  அளவில்  இது  நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது.  ஆனால், என்று  நிகழ்ந்தது  என்பது  தெளிவாக  தெரியவில்லை.