ஜனநாயகத்துக்கான கூப்பாடு அழிவைக் கொண்டுவரும்: கெராக்கான் வனிதா எச்சரிக்கை

g wanitaகூடுதல்  ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும்  கோரிக்கைகளுக்கு  செவிசாய்க்க  வேண்டாம்  என்று  எச்சரிக்கும்  கெராக்கான்  மகளிர்  பகுதி,  மலேசியாவின்  “அரசியல்  நிலைப்பாட்டுக்கு”  தடுப்புச்  சட்டங்கள்  தேவை  என்றும்  வலியுறுத்துகிறது.

“கெராக்கான்  மகளிர்  பகுதி  தடுப்புச்  சட்டங்களை  முழுமையாக  ஆதரிக்கிறது.  அவை, அரசியல்  நிலைத்தன்மையைக்  காக்கவும்  கூட்டரசு  அரசமைப்பு, ருக்குன் நெகாரா ஆகியவற்றை  நிலைநிறுத்தவும்  அவசியம்”, என்று  அதன்  தலைவர்  டான்  லியான்  ஹோ கட்சி மாநாட்டில்  இன்று  கூறினார்.

“ஜனநாயகத்துக்கு  விடுக்கப்படும்  கோரிக்கைகளுக்கு  செவிசாய்க்க  வேண்டியதில்லை. அது  இறுதியில்  நம்மையே  அழித்துவிடும்”, என்றாரவர்.