பிஎன்னுக்குப் ‘புல்லுருவி’ என்ஜிஓ-களுடன் உறவு தேவையில்லை

g youthபிஎன்,  “இன, சமயம்”  சார்ந்த  என்ஜிஓ-களுடன்  நெருக்கமாக  இருப்பது  போல்  காணப்படும் நிலையை  விட்டொழிக்க  வேண்டும். அந்த  என்ஜிஓ-கள்  “புல்லுருவிகள்”  என்றும்  அவற்றால் பிஎன்னுக்குக்  கெடுதல்தான்  என்றும்  கெராக்கான்  இளைஞர் தலைவர்  எச்சரித்துள்ளார்.

“அவை  பிஎன்னுக்கு  ஆதரவாக  இருப்பதுபோன்ற  தோற்றப்பாட்டை  உருவாக்கி  வைத்துள்ளன.  ஆனால், அவற்றின்  தலைவர்களின்  தீவிரப்  பேச்சு மலேசியர்களுக்கு  பிஎன்மீது  ஆத்திரத்தையும்  வெறுப்பையும் உண்டாக்கியுள்ளது.

“ஒரு  என்ஜிஓ  அதன்  கோரிக்கையை  ஏற்காவிட்டால் பிஎன்னுக்கு   அளிக்கும்  ஆதரவை  மீட்டுக்கொள்ளப்போவதாகக்கூட  எச்சரித்துள்ளது”, என  கெராக்கான்  இளைஞர்  தலைவர்  டான்  கெங்  லியாங்  கூறினார்.

அதிகாரத்துவ  பாரங்களில்  இனம்  பற்றி  இன்னமும் வினவப்படுவது   அவசியமற்றது  எனவும்  அவர்  சொன்னார்.

“அரசமைப்புப்படி  நாம்  அனைவருமே ‘பங்சா  மலேசியா’ தானே”,  என்றாரவர்.