அன்வாரின் வழக்குரைஞர்களை மிரட்டக்கூடாது

sivaதங்களுக்கு  எதிரான  மிரட்டல்கள்  நிறுத்தப்பட  வேண்டும்  என்ற  அன்வார் வழக்குரைஞர்களின்  கோரிக்கை  குறித்து அரசாங்கமும்  சட்டத்துறைத்  தலைவரும் (ஏஜி) மவுனமாக  இருப்பது  வருத்தமளிப்பதாக  பிகேஆர்  சட்டப்  பிரிவுத்  தலைவர்  ஆர்.சிவராசா  கூறினார்.

அன்வாரின்  வழக்குரைஞரும்  பாடாங்  செராய்  எம்பி-யுமான  என். சுரேந்திரக்கு  எதிராக  தேச  நிந்தனைக்  குற்றம்  சுமத்தப்பட்டிருப்பதன்  தொடர்பில்தான்  அவர் இவ்வாறு  கூறினார்.

“அவர்கள்  மவுனமாக  இருப்பதும்  நடவடிக்கை  எடுக்காமலிருப்பதும்  அன்வாருக்கு அவரின்  இறுதி  முறையீட்டு  வழக்கில்  நியாயமான  விசாரணை  மறுக்கப்படுகிறது  என்ற  கருத்தைத்தான் வலுப்படுத்துகிறது.

“வழக்குரைஞர் குழுத்  தலைவரின்  தலைக்குயரே  தேச  நிந்தனைக்  குற்றச்சாட்டு  தொங்கிக்  கொண்டிருந்தால் அக்குழு  வாதங்களைத்  திட்டமிடுவது  எப்படி,  வாதாடுவது  எப்படி?”, என  சிவராசா  வினவினார்.