நீங்களும் வந்தேறிகள்தான் என்பதை மறந்துவிடாதீர், அம்னோவுக்கு நினைவுறுத்தல்

 

Pendatang1இன்று கெராக்கான் மாநாட்டில் பேசிய ஒரு பேராளர் அம்னோ தலைவர்கள் “வந்தேறிகள்” என்று கூறும் கருத்துகளுக்கு எதிராக அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று அப்பேராளர் அவர்களுக்கு நினைவுறுத்தினார்.

“மலேசியர்களின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்துகிறேன். மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகிய அனைவரும், உண்மையான பூமிபுத்ராக்காளாகிய ஓராங் அஸ்லி, சபாகான்ஸ் மற்றும் சரவாக்கியர்கள் தவிர்த்து, வந்தேறிகள்தான்”, என்று ஜொகூர் பேராளர் டான் லாய் சூன் கூறினார்.

“சீனர்களை வந்தேறிகள் என்று அடிக்கடி கூறும் அம்னோ உறுப்பினர்கள் அவர்களும்கூட வந்தேறிகள்தான் என்பது பற்றி சிந்திப்பதே இல்லை”, என்று அவர் கட்சித் தலைவர் மா சியு கியோங்கின் கொள்கை உரை மீது தமது கருத்தைத் தெரிவிக்கையில் கூறினார்.