‘உணர்ச்சிவயப்பட வைக்கும்’ விவகாரங்களை வெளியிடாதீர்: ஊடகங்களுக்கு கெராக்கான் அறிவுறுத்து

kogilan pillaiஊடகங்கள்,,  உணர்ச்சிவயப்பட  வைக்கும்  செய்திகளைக் குறிப்பாக  அரசியல்  தலைவர்கள், கட்சியினர்  எழுப்பும்  இன  விவகாரங்களை   வெளியிடுவதைத்  தவிர்க்க  வேண்டும்.

“அப்படிப்பட்ட  கருத்துகளுக்கு  ‘இடமில்லை’ என்று  சொல்ல  வேண்டிய  ஊடகங்கள் அவற்றை  வெளியிடுவோருக்கு  விளம்பரம்  கொடுப்பது  அவர்களை ஹீரோக்கள்  ஆக்கிவிடும்” என  கெராக்கான் உதவித்  தலைவர்  ஏ.கோலிலன்  பிள்ளை  கூறினார்.

ஊடகங்களுக்கு  மக்களிடையே  பெரும்  செல்வாக்கு  இருப்பதால்  அவை பொறுப்பறிந்து  நடந்துகொள்ள  வேண்டும்  என்று  கோகிலன் பிள்ளைக்   கேட்டுக்கொண்டார்.