லியோ: பைபிள் எரிப்பு விவகாரத்தில் அமைச்சரவை முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல

liowபைபிளைக்  கொளுத்த  வேண்டும்  என்று  தூண்டிய  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிக்கு  எதிராக  நடவடிக்கை  இல்லை  என்று  அமைச்சரவை  முடிவு  செய்திருப்பதாகக்  கூறப்படுவதைப்  போக்குவரத்து  அமைச்சர்  லியோ  தியோங்  லாய்  மறுத்துள்ளார்.

அவ்விவகாரம்  பற்றி  அமைச்சரவை  விவாதித்தது  உண்மைதான்  என்பதை  ஒப்புக்கொண்ட  லியோ, அதில்  முடிவு  எதுவும்  செய்யப்படவில்லை  என்று  கூறினார்  என  சின்  சியு  டெய்லி  அறிவித்துள்ளது.