-மு. குலசேகரன், அக்டோபர் 20, 2014.
இன்றைய உத்துசான் மலேசிய நாளிதழில் உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமிடி நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும் ஒரே மொழிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்ற தமது தனிப்பட்ட கருத்தை தெரிவித்ததாக செய்தி வந்துள்ளது.
இந்தச் செய்தி மிகவும் கண்டனதுக் குறியது.
இந்த நாட்டில் சீன தமிழ்ப் பள்ளிகள் எப்பொழுதும் நிலைத்திருக்கும் என்ற உறுதி மொழி பிரதமரால் ம.சீ.ச மாநாட்டில் வழங்கப்பட்டு ஒரு வாரம் கூட பூர்த்தியாகாத நிலையில், உள்துறை அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது பிரதமருக்கே சாவல் விடுவது போல் இருக்கிறது.
ஒரே மலேசியா என்று பிரதமர் கூறினாலும் அதற்கு தாம் உடன் பட வில்லை என்று கூறுவது போலவும் இது உள்ளது.
சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் எந்த காலக் கட்டத்திலும் இன ஒற்றுமைக்கு ஊறு விளைவித்துள்ளதாக ஆதாரங்கள் இல்லை.
அராசாங்கத்தின் நிதி ஒதுக்குவதிலும், தளாவாடங்கள் கொடுப்பதிலும் , உபகாரச் சம்பளம் வழங்குவதிலும் உள்ள பாகுபாடுகள்தாம் மக்களை ஒற்றுமையாக இருக்க விடாமல் செய்பவை.
ஒரே மொழிக் கொள்கையை ஏற்படுத்தி எல்லா மாணவர்களும் ஒரே பள்ளியில் பயில்வதனால் ஒற்றுமை மேலோங்கும் என்பது அர்த்தமில்லதா ஆதாராமில்லாத கூற்று.
ஒற்றுமை வளர எல்லா மாணவர்களும் ஓரே குடையின் கீழ் இணைய வேண்டும் என்று கருத்து கூறியிருக்கும் சாஹிடி, மாரா தொழிற் நுட்பக்கல்லூரிகளில் ஒரே இன மாணவர்கள் மட்டுமே பயில இடம் கொடுக்கும் அரசாங்கக்க் கொள்கையை மாற்ற முன் வருவாரா ?
அராசாங்கத் துறையில் 90 % ஒரே இன ஆதிக்கத்தை மாற்ற முன்வருவாரா?
வளமும் பழமையும் முதிர்ச்சியும் அடைந்த மொழிகளான சீனமும் தமிழும் இந்த நாட்டில் பயிற்றுவிக்கப்படுவது குறித்து அவர் பெருமை கொள்ளாமல், அதை ஒழிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு சாஹிடி சொல்லும் கருத்தை மற்ற பாரிசான் உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக சாட வேண்டும்.
குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளின் காவலன் எனக்கூறி கொள்ளும் ம.இ.காவும் , சீனர்களின் அரண் எனக்கூறும் ம.சீ சாவும் அடுத்த அமைச்சரை கூட்டத்தில் இது குறித்து விவாதித்து, இது போன்ற தேச ஒற்றுமையை குலைக்கும்ம் மக்களை பயமுறுத்தும் செய்திகளை வெளியிடுபவதினின்றும் உள் துறை அமைச்சர் சாஹிடியை அமைச்சரவை தடுத்து, கண்டிக்கவேண்டும் என்று பிரதமருக்கு
நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திலேயே தாய் மொழிப்பள்ளிகளுக்கு உத்தரவாதம் வழங்கியிருக்கும் போது மீண்டும் மீண்டும் அதே பிரச்சனையை எழுப்புவது மலாய்க்காரர் அல்லாதோரின் மனதில் அச்சத்தையும், அராசாங்கத்தின் மீது உள்ள நம்பகத் தன்மையையும் பெரிதும் பாதிக்கும்.
மலாய்ப் பள்ளிகள் எப்படி இந்த நாட்டில் அரசியலமைப்புச் சட்டதின்படி உள்ளதோ அதே நிலைதான் சீன தமிழ்ப்பள்ளிகளும் என்ற உண்மையை சாஹிடி போன்ற அம்னோ தலைவர்களும் பெர்காச தலைவர் இப்ராஹிம் அலியும் உணரவேண்டும்.
அதை அவ்வப்போது நாட்டின் பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
அப்படி அடிக்கடி நாட்டின் பிரதமர் உத்தரவாதம் அளிப்பது, மக்கள் மத்தியில் ஒரு தவறான என்ணத்தை உண்டு பண்ணும். அதாவது சீன தமிழ்ப்பள்ளிகள் பிரதமரின் தயவினாலும் அவரின் விருப்பதின் பேரிலும் இயங்குகின்றன போன்ற ஒரு மாயை உண்டு பண்ணும்.
மலேசியாவில் வாழும் ஒவ்வொரு இனத்திற்கும் அவர்களின் மதம் இனம் மொழி குறித்து அரசியல் சாசனத்தில் விரிவாகவும் திடமாகவும் பதிவு செய்யபட்டுள்ளன. இதன் தொடர்பாக வரும் உரிமைகளையும் உத்தரவாதங்களையும் அடிக்கடி கேள்வி எழுப்பி மக்களை குழப்பி அவர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது சாஹிட் ஹமிடி போன்ற இனவாதிகள்தான் என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இனம் சார்ந்த அரசியல் கட்சிகள் இருப்பதுதான் இந்த நாட்டின் இன ஒற்றுமையின்மைக்கு முதல் காரணம். நல்லது செய்ய முடியாத, நேர்மை வாசமே சற்றும் இல்லாத இந்தக் குட்டைக் குழப்பிகளுக்கு எதையாவது குழப்பாமல் இருக்கவே முடியாது. இது சிங்கையில் ஒரு தலைமைக்குமாஸ்தாவாகக்கூட பணிபுரிய முடியாது.
கண்டனம் மட்டும் போதாது. அடுத்து என்ன செய்வது என்பதை யோசியுங்கள்.
தாய்மொழிப் பள்ளிகளை மூடிவிட்டு ஒரே மொழிப் பள்ளியை நடத்தினால் நாட்டில் ஒற்றுமை மேலோங்கிடுமா? இந்த நாட்டில் ஒற்றுமை இல்லாததற்கு உண்மையான காரணம் என்ன என்பது ஆரயப்பட வேண்டும். அப்படி (நேர்மையாக) ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் வெளிவரும். அந்த உண்மையை ஏற்க இந்த சாஹிட் அமிடி ரெடியா?
இந்நாட்டில் என்றுமே ஒற்றுமை கிடையாது. நம்மை எல்லாம் அவங்களைப்போல் முட்டாள்களாகவும் கூறு கெட்ட ஜென்மங்களாக்கவுமே இவ்வளவும். ஏன் தற்போது தேர்வு இல்லாமல் spm வரை போக முடிகிறது?
இன ஒற்றுமை மலாய் மொழியால் வந்துவிடும் என்ற அபார கண்டுபிடிப்புக்கு ஹமிட் அவருக்கு இன்னும் 10 PHD கொடுக்கலாம்.
சரி மலாய் பள்ளியில் போடுறோம், இவர்களை( ,,,,,,,,,,,போல ) போல 4 பொண்டாட்டி கல்யாணம் பண்ணவும் 4 வெளியே வெச்சிக்கவும் நாடாளுமன்றத்தில் ஹமிட் கட்டாய பரிந்துரை செய்ய சொல்லுங்கள். நமது மக்கள் தொகையாவது பெருகட்டும்.
நமக்கு மொழி பிரச்னை இல்லை. எதையாச்சும் பேசி ரோஜா பண்ணி இந்த நாட்டுல உலப்பலாம். ஆனால் அவருக்கு ஆங்கிலம் சற்று பெப் பெப்? அடுத்த துணை பிரதமர் பதவிக்கு போகணும் .அங்கே ஆங்கிலம் ஆப்பு !! பிறகு பிரதமர் பதவிக்கு வேற (ஆ) மீசை வைக்கணும். இவர இப்போதே கல்வி அமைச்சர மாற்ற வேண்டும்.
இன்னும் பத்து ஆண்டுகளில் விமானிகள் ம……யில் பேசி 100 விமானத்த அட்லாண்டிக்கவில் இறக்குவாணுங்க? ஏர் போட்டில் உலக மக்களிடம் பல்ல காட்டி திஸ்….திஸ்…. ஓகே ….ஓகே பாடலாம்.
இப்பெவே “யு பேலடி மலேசியன்” என்று இராக் காரன் துப்பராணுங்க!
வெள்ளைக்காரன் “யு ஷிட்” என்கிறான்!!!!
உள் துறை அமைச்சர் பதவி…நாட்டில் 10 மில்லியன் வெளிநாட்டவர்கள் இந்நாட்டில் உள்ளார்கள்,,,,பங்களா பாகிஸ்தான் காரனுங்க மலாய் பேசி நம்ம நாட்டு பெண்களை வெச்சிக்கிட்டு பிஸ்னெஸ் பண்றான். ஓசி பிரஜாவில் பிள்ளைய வேற தரான்.
இதில் 5 மிலியன்னாவது பாஸ்போர்ட் காலாவதி கேஸ். அத போய் பார்க்கா சொல்லுங்க. லட்சம் கணக்குல ஜெயில வெளி நாட்டு கைதிகள் .கோடி கணக்கில் மக்கள் வரிப்பணம் ஜெயில கரையுது.
இவர் அமைச்சின் கஷ்டமல RM 1.6 பில்லியன் சரக்கு வரி காட்டமா 20 அதிகாரிகள் ரம் 4 மிலியனை ஓட்ட போட்டாங்க போய் ஆடிட் பண்ண சொல்லுங்க? நாட்டில் யானை பொந்துல போறது தெரியாம எலி சந்துல போற விசியத்தை இவர் அலடிக்கொள்வதை நாடாளுமன்றத்தில் விளாசுங்கள்.
ஓகே அப்படியா அப்போ தேசிய மொழி பள்ளியே அளிச்சிடு 1 மொழி பள்ளி வைப்போம் ஓகே வ .
அப்படியே தமிழ் வானொலிகளை நிறுத்திவிடுங்கள். பிறகு தமிழ்ப்பத்திரிகைகளை இழுத்து மூடுங்கள். அஸ்ட்ரோ லைசென்ஸை முடக்குங்கள். இததானே உங்கள் திட்டம்.? உனக்கு கொ_ _ என்று ஒன்று இருந்தால் இதை அப்படியே தேர்தல் சமயத்தில் உன்னால் சொல்ல முடியுமா? அன்பர்களே…நண்பர்களே…இன உணர்ச்சியைத் தூண்டும் பாரிசான் தலைகளின் பட்டியல் ஒன்றை இப்போதிருந்தே தயாரித்து அதை தேர்தல் சமயத்தில் அப்படியே நம் இனத்தாரிடம் கொடுத்து அவர்களை நராகரிக்கச் செய்ய வேண்டும். நல்ல பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். இது மலேசியா…பல்லினத்துக்காகத்தான் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. நாமும் இங்கே சுதந்திர மனிதர்கள். நாமும் இங்கே பூமிகள் தான். இன்ம் சொல்லப் போனால் இவர்கள் இங்கே ‘வந்தேறிகளா’கு முன்னே கடாரத்தில் நாம் கூடாரம் போட்டவர்கள், நம் முன்னோர் போட்ட கடடைகள்தான் இன்று அங்கே மரமாக நிற்கின்றன என்ற வரலாற்று உண்மையை இது போன்ற சடைகளுக்கு நாம் கற்றுத்தரவேண்டும். . .
பெங்காலான் கூபோரில்,பிரதமர்,துணை பிரதமர் சயாமிய தாய்மொழி பள்ளி அமைக்க மாண்யம் கொடுத்துவிட்டு பின்னர் புத்ராஜயாவில் அறிக்கை விடுவர்,தாய் மொழி பள்ளி தேவை இல்லையென்று,நாராயண நாராயண.
காய் நன்றாகச் சொன்னீர். செம்பருத்தியின் இந்து வாசகர்கள் அனைவருக்கும் எமது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த மாங்கா மடயங்கலை அமைச்சராய் வைத்தால் இப்படிதான் உலருவான்கள்???
முதலில் இஸ்லாமிய கல்வி கூடங்களை மூடுவாரா
A
இதற்கு ம இ க அமைச்சர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் . அல்லது இந்த செய்தி தன் காதில் விலவில்லை என்று செவிடனாக இருந்து கொண்டு நடிகிரர்கள
அரபு மொழியையும் ஆங்கில எழுத்துக்களையும் இரவலாக பயன் – படுத்தும் மூடர்களுக்கு தாய் மொழியின் சிறப்பு எப்படி தெரியும் ?